ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களாக மலை ரயில் பாதை அமைந்துள்ள வன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்கிரோவ் மலை ரெயில் பாதையில் மன்சரிவு ஏற்பட்டது. பாறைகள், மண் விழுந்து மலை ரயில் தன்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் கடந்த 2 நாட்களாக நிறுத்தியது. தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து 2 நாட்களாக நடந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று வழக்கம் போல் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்றது. காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டு சென்றது. 2 நாட்களுக்கு பின் ரெயில் இயக்கப்பட்டதால் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *