
ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை என ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேரான செந்தில், பாண்டியன், பழனிச்சாமி ஆகியோர் ஜெகநாதன் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வடவள்ளி போலீஸ் ஸ்டேசன் , கோவை மாநகர கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் தர்ணாவில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர்

அப்பொழுது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஒலிபெருக்கியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.