தொடர்ந்து ராஜாராமின் மகன் வெங்கட் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இவர்களின் இடத்திற்கு 9 க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் உள்ளே நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும்,
ஆடிட்டர் ராஜாராமை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சண்முகம் உள்ளிட்ட 9 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.எம் நகரில் குடியிருப்பவர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பொது வெளியில் பரப்பி வந்துள்ளனர். ராஜாராமுக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தை சி .எம். நகர் என்ற பெயரில் சி. ராஜு மற்றும் அவரது குடும்பத்தார் மோசடியான ஆவணங்கள் மூலம் அங்கு குடியிருப்போருக்கு குறைந்த விலைக்கு விற்ற உண்மை அங்கு வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு தெரிந்தும் ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தாரை அவர்களது இடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து வருவது வருத்தமான ஒரு விஷயமாகும். உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கையோடு ராஜாராம் குடும்பத்தார் காத்திருக்கின்றனர்….