
கோவை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான செந்தில் கார்த்திகேயன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் திமுகவின் செயல்பாடுகள் நிறைவாக உள்ளதால் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதாக அவர் கூறினார் மேலும் இவருடன் காளப்பட்டி பகுதி இளம் பெண்கள் பாசறை செயலாளர் விஜயகுமார் கோவை மாநகராட்சி 7 வதுஅதிமுகவின் வார்டு செயலாளர் பாலகிருஷ்ணன் அதிமுகவின் 23 வது வார்டு தலைவர் ஆறுமுகம் அதிமுகவின் மாவட்ட ஐடி வின்னிங் மாவட்ட துணை செயலாளர் கலைமணி 7வது வார்டு அதிமுக ஐ டி விங்கின் செயலாளர் மகேஷ் குமார் காளப்பட்டி பகுதி மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் உட்பட 25 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ .ப .ரவி திமுக அமைச்சர்கள் துரைமுருகன் ,கே .என்.நேரு ,பாராளுமன்ற உறுப்பினர் டி .ஆர் .பாலு ஆர். எஸ் .பாரதி இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்