பைனான்ஸ் அதிபர் கந்துவட்டி புகாரில் கைது

கோவை கவுண்டம் பாளையம் அடுத்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (60).பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிழும் செய்து வருகிறார். கவுண்டர்மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையம் பாலாஜி கார்டனைச் சேர்ந்த பைனா ன்ஸ் அதிபர் சதீஷ்குமார் (39) என்பவரிடம் மாணிக்கம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். மாதந்தோறும் இதற்காக அவர் வட்டிப்பணம் கொடுத்து வந்தார். கடந்த 3 மாதங்களாக தொழில் சரியாக இல்லாததால் மாணிக்கத்தால் சரியாக வட்டிப்பணத்தை கட்ட முடியவில்லை. சதீஷ்குமார் தொடர்ந்து வட்டிப்பணத்தை கேட்டு மாணிக்கத்துக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தார். தொல்லை தாங்க முடியாமல் மாணிக்கம் துடியலூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரில் சதீஷ்குமார் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். அவர் கணக்கில் வராமல் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் பணம் வைத்துள்ளார். கந்து வட்டிக்கு கொடுக்கும் நோக்கத்தில் அந்த பணத்தை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.