
கோவை சிங்காநல்லூர் அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் என் மனைவி லஷ்மி (50 ).இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தாரோடு பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் அரசு பேருந்து கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார் . குளத்தேரி பஸ் ஸ்டாப் அருகே வந்த பொழுது பஸ்சினை நிறுத்த லட்சுமி கூறியுள்ளார். ஆனால் பஸ் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. இதை தொடர்ந்து லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என கேட்டனர்.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பிறகு அடுத்த பஸ் ஸ்டாப்பான ராஜ லட்சுமி மில் பஸ் ஸ்டாப் அருகில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது லட்சுமி குடும்பத்தார் பஸ்சில் இருந்து இறங்கினர். ஆனால் லட்சுமியின் மகன் மட்டும் பஸ்சில் இருந்து இறங்காமல் தொடர்ந்து டிரைவர் மட்டும் கண்டக்டரிடம் தகராறு சண்டை போட்டார். இதை பார்த்த லட்சுமி மீண்டும் பஸ்சுக்குள் ஏறி சண்டையை விலக்கிவிட முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த பஸ்ஸிலிருந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் லட்சுமி மற்றும் அவரது மகனை பஸ்ஸில் இருந்து கீழே பிடித்து தள்ளினர். இதில் ரோட்டில் விழுந்த லட்சுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு அவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து சிங்கநல்லூர் போலீசார் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.